சாண்டில்யன்
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
யவன ராணி என்னும் நூல் முதல் பாகம் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
புதினங்கள்
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.இவரது நூல்கள்
- கடல் புறா (3 பாகம்)
- யவன ராணி (2 பாகம்)
- ராஜ முத்திரை (2 பாகம்)
- பல்லவ திலகம்
- விலை ராணி
- மன்னன் மகள்
- ராஜ திலகம்
- ஜல தீபம் (3 பாகம்)
- கன்னி மாடம்
- சேரன் செல்வி
- கவர்ந்த கண்கள்
- மலை வாசல்
- ஜீவ பூமி
- மஞ்சள் ஆறு
- மூங்கில் கோட்டை
- சித்தரஞ்சனி
- மோகினி வனம்
- இந்திர குமாரி
- இளைய ராணி
- நீள்விழி
- நாக தீபம்
- வசந்த காலம்
- பாண்டியன் பவனி
- நாகதேவி
- நீல வல்லி
- ராஜ யோகம்
- மோகனச் சிலை
- மலையரசி
- கடல் ராணி
- ஜலமோகினி
- மங்கலதேவி
- அவனி சுந்தரி
- உதய பானு
- ராஜ்யஸ்ரீ
- ராஜ பேரிகை
- நிலமங்கை
- புரட்சிப் பெண்
- சந்திரமதி
- நங்கூரம்
- ராணா ஹமீர்
- ராணியின் கனவு
- செண்பகத் தோட்டம்
- மனமோகம்
- மதுமலர்
- அலை அரசி
- மண் மலர்
- மாதவியின் மனம்
- திருப்பாவை
- கம்பன் கண்ட பெண்கள்
யவன ராணி என்னும் நூல் முதல் பாகம் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
Comments
Post a Comment